Saturday, April 19, 2014

Desiderata


The “Desiderata” (means something that is needed or wanted) poem was originally written by Max Ehrmann. It was used by Rev. Frederick Kates of St Paul´s Church in Baltimore in devotional materials he compiled for his congregation. On top of this material he had written "Old St Paul´s Church, Baltimore A.C. 1692". The year was the foundation year of the church.

Life is so precious and valuable. The advice given in this poem is valuable and worth some serious contemplation.   During my college days, my friend had sent this to me and now only I could fully understand and appreciate its relevance in life.  Surely, you will find this very useful.

Desiderata

Go placidly amid the noise and the haste, and remember what peace there may be in silence.
As far as possible, without surrender, be on good terms with all persons.

Speak your truth quietly and clearly; and listen to others,
even to the dull and the ignorant; they too have their story.

Avoid loud and aggressive persons; they are vexatious to the spirit.
If you compare yourself with others, you may become vain or bitter,
for always there will be greater and lesser persons than yourself.

Enjoy your achievements as well as your plans.
Keep interested in your own career, however humble;
it is a real possession in the changing fortunes of time.

Exercise caution in your business affairs, for the world is full of trickery.
But let this not blind you to what virtue there is;
many persons strive for high ideals, and everywhere life is full of heroism.
Be yourself. Especially do not feign affection.
Neither be cynical about love, for in the face of all aridity and disenchantment,
it is as perennial as the grass.

Take kindly the counsel of the years, gracefully surrendering the things of youth.
Nurture strength of spirit to shield you in sudden misfortune.
But do not distress yourself with dark imaginings. Many fears are born of fatigue and loneliness.

Beyond a wholesome discipline, be gentle with yourself.
You are a child of the universe - no less than the trees and the stars;
you have a right to be here. And whether or not it is clear to you,
no doubt the universe is unfolding as it should.

Therefore be at peace with God, whatever you conceive Him to be.
And whatever your labors and aspirations,
in the noisy confusion of life, keep peace in your soul.

With all its sham, drudgery, and broken dreams, it is still a beautiful world.
Be cheerful. Strive to be happy.

Monday, April 14, 2014

தீதும் நன்றும் பிறர் தர வாரா



விஜய வருடம் முடிந்து ஜய  வருடம் தொடங்கி விட்டது. எப்போதும் போல் சில நட்புக்களின் வாழ்த்துக்கள், சர்க்கரை பொங்கல், டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன மற்றும் திரைக்கே வராத படங்களில் எதைப் பார்ப்பது என்று தெரியாமல் எதையும் பார்க்காமல், காமெடி சேனலுக்கு பதிலாக கேப்டன் டிவியில் கேப்டனின் பேச்சை பார்த்துவிட்டு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் புது வருடத் தொடக்கம் பெரும்பாலும் முடிந்து விட்டது.

இன்று ஏதாவது ஒரு உபயோகமான தகவலை வலை தளத்தில் பதிவு செய்யா விட்டால் என் நூற்றுகணக்கான (ஆயிரக்கணக்கான, இலட்சகணக்கான என்று மிகைப் படுத்தி பொய் சொல்ல விரும்பவில்லை) வாசக நண்பர்கள்  ஏமாந்து விடுவார்கள் என்பதால் இந்த பதிவு.

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதிய "உலகால் அறியப்படாத ரகசியம்" என்ற புத்தகத்திலிருந்து சில செய்திகள்.

ஜேம்ஸ் ஆலன் என்ற தத்துவ ஞானி கூறுகிறார் "வாழ்வில் மறைந்து கிடக்கும் சில உண்மைகள்தான் நம்மை வழி நடத்திச் செல்கின்றன என்று".

தனி மனித வாழ்விலும் சரி, சமுதாய வாழ்விலும் சரி இது உண்மை.  நாம் விளைவுகளை கண்டு  அஞ்சுகிறோம் அல்லது தவிர்க்க முயல்கிறோம், ஆனால் ஏன் இந்த விளைவுகள் என்று யோசிப்பதில்லை.  எந்த விளைவும் தானே அல்லது தற்செயலாக நிகழ்வதில்லை.  எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இதைத்தான் "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை  விதைத்தவன் தினை அறுப்பான்" என்றும் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் "cause and effect" என்று சொல்கிறோம்.

நமக்கு ஒரு துன்பம் நேரும்போது யாரும் நம் முன் வந்து நீ இந்த செயலை செய்ததால் இந்த துன்பம் வந்தது என்று கூறுவதில்லை.  நாமும் விளைவில் வருந்தும் அளவுக்கு காரணத்தை யோசிப்பதில்லை.

நம்மை அப்பழுக்கற்ற மனிதர்களாக நினைத்துகொண்டு "நமக்கு ஏன் இந்த சோதனை என்று புலம்புகிறோம்".  என்னுடைய எந்த தீய எண்ணங்களால் இந்த விளைவு என்று யோசித்தால் வாழ்வில் மறைந்து கிடக்கும் நியாயங்கள் புலனாகின்றன.

நமது எண்ணங்களுக்கு ஏற்பத்தான் நம்முடைய சூழ்நிலைகள் அமைகின்றன. தீக்குள் விரலை வைத்தால் சுடுவது போல தீய எண்ணங்களின் விளைவுகள் உடனுக்குடன் நிகழ்வதில்லை. அப்படி நிகழ்ந்தால் நமக்கு காரண காரியம் புலப்பட்டுவிடும். நாமும் தவறுகள் செய்ய மாட்டோம்.  ஆனால் வாழ்வில் அப்படி எண்ணங்களுக்கும் விளைவுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதில்லை.

எண்ணங்கள் ரகசியமானவை, அவற்றை மறைத்துவிடலாம் என்று நாம் நினைக்கிறோம்.  ஆனால் அவற்றை ஒரு நாளும் ஒளித்து வைக்க முடியாது.

நாம் எதை மற்றவர்களுக்கு நினைகிறோமோ அல்லது செய்கிறோமோ அது நமக்கே வந்து சேர்கிறது.

நமக்கு வந்த துன்பங்கள் எத்தகைய எண்ணங்களினால் உருவாயின என்று ஆழ்ந்து யோசிக்கும்போது நமக்கு காரண காரியம் புலப்படத் தொடங்கும்.

புத்தகத்தினை படித்தவுடன் அதில் உள்ள சில சிந்தனைகளை அசை போட்டு பார்த்தேன். மிகவும் சத்தியமான வார்த்தைகள் அவை.

காரண காரியங்களைப் பற்றி அறியாமல் அல்லது கவலைப்படாமல் வாழ்வின் நியதிகளுக்கு மாறாக செயல்கள் செய்த பலரும் இன்று அதற்கான பலனை அனுபவிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

என் காரின் பின்னால் நான் எழுதியிருக்கும் வாசகம் "தீதும் நன்றும் பிறர் தர வாரா".  இந்த ஒரு சொற்றொடரின்  விளக்கம்தான் மேலே சொன்ன அத்தனை விசயங்களும்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கத் தேவையில்லை" என்ற திருமூலரின் வார்தைகளை இங்கு நினைவில் கொள்வோம்.





Sunday, March 23, 2014

நம்பிக்கையில் நிம்மதி

நம்பிக்கையில் நிம்மதி

நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்களில் ஒன்று கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்.  இதன் ஆறாம் பாகம் 'நெஞ்சுக்கு நிம்மதி' என்ற புத்தகத்தை இன்று புரட்டிக் கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது 'நம்பிக்கையில் நிம்மதி' என்ற தலைப்பு.  வாருங்கள் கவிஞரின் வார்த்தைகளை கொஞ்சம் உள் வாங்கலாம்.

எதன் மீது எனக்கு சந்தேகம் வந்தாலும் நிம்மதி தொலைகிறது.  எது பிடிக்கவில்லையோ அதில் இருந்து ஒதுங்கி  நில். ஆனால் தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ளாதே.

சாப்பிட்டு முடித்த பின் எதை சாப்பிட்டோமோ என்று நினைத்தால் அடிவயிற்றை கலக்கும்.  சாப்பிடுவதற்கு முன்னாலேயே நன்றாகப் பார்.

யோசித்து செய்த முடிவுகளில் நம்பிக்கை வை.

திருப்பதிக்கு போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும்போது பலன் இருக்கும் என்று நம்பு.

நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி இருந்தால் அப்போதும் நிம்மதி இருக்காது.  மீன் கூடைக்கு பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவருப்பே தோன்றும்.

இன்றைய பொழுது நன்றாக இருக்கும் என்று நம்பு. நன்றாகவே இருக்கும்.

தண்ணீரில் விழுந்து விட்டால் நீந்தத்  தெரியும் என்று நம்பு. நீந்தத் தெரிந்து விடும்.  கடன் வந்துவிட்டால் கட்ட முடியம் என்று நம்பு. கட்டிவிட முடியும்.

திருநீறோ திருமண்ணோ இடும் போது கடனுக்கு இடாமல் நம்பிக்கையில் இடு. அவை இருக்கும்வரை மூளை பிரகாசிக்கும்.

நாளைக்குத்  திருச்சிக்கு போகிறோம் என்று Rockfort  எக்ஸ்ப்ரஸில் ஏறு.  அது திருச்சி போய்  சேர்ந்து விடும். இதுவா போகும் என்று சந்தேகப்படு.  அது புறப்படவே புறப்படாது.

நம்பினால் கை கொடுப்பது நம்பிக்கை.

என்ன நண்பர்களே எப்படி இருக்கிறது கவிஞரின் வார்த்தைகள். எப்போதாவது நமக்கு வாழ்க்கையில் அவநம்பிக்கை தோன்றினால் சற்று கவிஞரின் வார்த்தைகளை படிப்போம். நம்பிக்கை கொள்வோம்.

  










Saturday, March 8, 2014

பெண்மையை போற்றுவோம்


பெண்மையை போற்றுவோம் 

பத்து  மாதம் சுமந்த கடனுக்காக காலம் முழுவதும் ஆண்களை வட்டி கட்ட வைப்பவர்கள் பெண்கள்.  ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் பப்பில் (PUB) உட்கார்ந்து "கப் கப்" என்று அடிப்பவர்கள் பெண்கள். உள்ளத்து அழகை  விட உடல் அழகை அதிகம் நம்புவர்கள் பெண்கள். மூக்கை சிந்தி சிந்தியே ஆண்களை சந்தி சிரிக்க வைப்பவர்கள் பெண்கள்.  சுற்றும் வரை சுற்றி விட்டு கடைசியில் "அண்ணா" என்று அல்வா கொடுப்பவர்கள் பெண்கள்.  (எல்லா இடத்திலும் இந்தக  காலத்து பெண்கள் என்று படிக்கவும், இல்லைஎன்றால் அந்தக் காலத்துப் பெண்கள் (ஆயாக்கள் என்ற பாட்டிகள்) கோபித்துக் கொள்வார்கள்).

மேலே கூறியதில் கூட குறைய இருந்தாலும் உண்மைதானே என்று நினைக்கும் ஆண்களா (அல்லது பெண்களா) நீங்கள்.

தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும்.  விதி விலக்குகளை வாழ்வின் விதியாக எண்ணி விடாதீர்கள்.

பொதுவாக ஒரு பெண் தாயாக, சகோதிரியாக, மனைவியாக, மகளாக மற்றும் நட்பாக - ஏதாவது ஒரு உறவில் மற்றொரு ஆணை வழி நடத்துபவளாக இருந்து கொண்டுதான் இருக்கிறாள்.

என் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் (அப்படி என்ன பெரிய முன்னேற்றம் என்று கேட்டு விடாதீர்கள்) என் மனைவியின் பங்கு மிக அதிகம் என்று சொன்னால் அது மிகை இல்லை.  சின்ன சின்ன விசயங்களில் கூட என்னிடம் முரண்படும் என் மனைவி, நான் எடுக்கும் முக்கிய முடிவுகளில் எல்லாம் தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்ததால்தான் நான் இன்று வெளி உலகில் நம்பிக்கையுடன் நடை போட முடிகிறது.

இன்று உலகில் வெற்றிகரமாக உலவி வரும் பல ஆண்களின் பின்னால் சத்தமில்லாமல் தோள் கொடுப்பவர்கள் பெண்கள்தான்.

ஒவ்வொரு ஆணும் தன் வீட்டுப் பெண்களை (மனைவியோ, தாயோ, சகோதிரியோ, அல்லது மகளோ) முழுமையாக மதித்து அன்பு செலுத்தினாலே உலகில் பல தவறான உறவுகள் ஏற்படாது என்பது என் தாழ்மையான கருத்து.

தவறான உறவால் கேட்டுப் போன ஆண்களைவிட சரியான நட்பால் உயர்ந்த ஆண்கள் அதிகம்.  (பல சமயங்களில் சில ஆண்களின் சுயநலத்தால் தவறிய பெண்கள்தான் அதிகம்).

நீரின்றி அமையாது உலகு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பெண் இன்றி அமையாது ஆணின்  வாழ்வு (இதற்கு முற்றும் துறந்த ஆதி சங்கருரும், ரமணருமே சாட்சி).

பெண்களை மதிப்போம்.  பெண்களை உயர்த்துவோம்.  பெண்களால் உயர்வோம்.





Saturday, March 1, 2014

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

படுத்த பத்தாவது நொடியில் ஆழ் துயில் கொள்ளும் எனக்கு மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் முழிக்க வேண்டும் என்ற நினைவே மஹா அசதியை தந்தது.  என்றாலும் 'எண்ணிய முடிதல் வேண்டும்'  என்ற முடிவில் முழிக்க ஆரம்பித்தேன் (பரிட்சையில் கூட இப்படி முழித்தது இல்லை).

டிவியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக மாற்றினேன்.  நம்மை தூங்க விடக் கூடாது என்று ஒவ்வொரு சேனலும் வேலை செய்து கொண்டிருந்தது. ஈஷா யோகாவின் மஹா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிரந்த சேனலில் கவனத்தை செலுத்தினேன்.

சத்குரு அவர்களின் உரையும், மக்கள் கூட்டமும், இசையும், அந்த இடத்தில் ஒரு சிறந்த  அதிர்வலையை ஏற்படுத்தி இருந்ததை உணர முடிந்தது.  சத்குரு "ஷம்போ" மஹா மந்திரத்தை தியானம் செய்ய சொன்னதும் மொத்த கூட்டமும் அவர் சொன்னபடியே கைகளை வயிற்றுக்கும்  மார்புக்கும் இடையில்  வைத்து தியானம் செய்யத்  தொடங்கியது.

நானும் என் வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யத் தொடங்கினேன். கொஞ்ச நேரம்தான்.     "ஷம்போ"  "அம்போ" ஆகிவிட்டது. முழித்துப் பார்த்தால் ஒரு அரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது.  நான் ஆழ் நிலை தூக்கத்தில் இருந்தேனா  அல்லது  ஆழ் நிலை தியானத்தில் இருந்தேனா  என்று தெரியவில்லை.  ஆனால் மனம் இப்போது நல்ல விழிப்புடன் இருந்தது.

என் விழிப்பைப் பற்றி கவலைப் படாமல் என் மனைவியும் குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் - எங்கே யாரவது தூக்கத்தைப் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்பது போல போர்வையை இழுத்துப் போர்த்தியபடி இருந்தார்கள்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நாமும்  போர்வைக்குள் அடைக்கலம் ஆகி விடுவோம் என்ற பயத்தில் வெளியே வந்து,  பின்னிரவை புத்தகம் படித்துக்கொண்டும், டிவி பார்த்துக்கொண்டும், ஊஞ்சல் ஆடிக் கொண்டும் மெதுவாக கழித்தேன்.

பொதுவாக கண் முழிப்பவர்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது சத்சங்கத்திலோ நேரத்தைக்  கழிப்பார்கள்.  ஆனால்  நான் மட்டும் வள்ளலார் சொன்னபடி "தனித்து இருந்து விழித்து இருந்தேன்".

முடிந்தால் ஒரு இரவு தனித்து இருந்து விழித்துப் பாருங்கள். வாழ்கையின் மற்றொரு கோணம் புரிய ஆரம்பிக்கும்.


  






Wednesday, February 12, 2014

Illusions


Encouraged by the feedback about the insights taken from the book “The Alchemist”, I am now sharing a few thoughts on the book “Illusions: The Adventures of a Reluctant Messiah” by Richard Bach.  He is more popular for the book “Jonathan Livingston Seagull.

Again, it is not the story but the insights from the story that inspires me more. Just read for yourself.

  • Teaching is reminding others that they know just as well as you. You are all learners, doers, teachers.
  • Your only obligation in any lifetime is to be true to yourself.  Being true to anyone else or anything else is impossible. 
  • The simplest questions are the most profound. Where were you born? Where is your home? Where are you going? What are you doing? - Think about these once in a while, and watch your answers Change.
  • You teach best what you most need to learn.
  • Your friends will know you better in the first minute you meet than your acquaintances will know you in a thousand years.
  • The best way to avoid responsibility is to say, “I’ve got responsibilities.
  • You are led through your lifetime by the inner learning creature, the playful spiritual being that is your real self.
  • Don’t turn away from possible futures before you’re certain you don’t have anything to learn from them.
  • You’re always free to change your mind and choose a different future, or a different past.
  • There is no such thing as a problem without a gift for you in its hands. You seek problems because you need their gifts.
  • The bond that links your true family is not one of blood, but of respect and joy in each other’s life.
  • Rarely do members of one family grow up under the same roof.
  • Argue for your limitations, and sure enough, they’re yours.  
  • A cloud does not know why it moves in just such a direction and at such a speed. It feels an impulsion... this is the place to go now. But the sky knows the reasons and the patterns behind all clouds, and you will know, too, when you lift yourself high enough to see beyond horizons.
  • You are never given a wish without also being given the power to make it true.  You may have to work for it, however.
  • The world is your exercise-book, the pages on which you do your sums.  It is not reality, although you can express reality there if you wish. You are also free to write nonsense, or lies, or to tear the pages.
  • If you will practice being fictional for a while, you will understand that fictional characters are sometimes more real than people with bodies and heartbeats.
  • Your conscience is the measure of the honesty of your selfishness. Listen to it carefully.
  • Every person, all the events of your life are there because you have drawn them there.  What you choose to do with them is up to you.
  • The truth you speak has no past and no future. It is, and that’s all it needs to be.
  • Here is a test to find whether your mission on earth is finished: If you’re alive, it isn’t.
  • In order to live free and happily, you must sacrifice boredom. It is not always an easy sacrifice.
  • Don’t be dismayed at good-byes. A farewell is necessary before you can meet again. And meeting again, after moments or lifetimes, is certain for those who are friends.
  • The mark of your ignorance is the depth of your belief in injustice and tragedy.
  • What the caterpillar calls the end of the world, the master calls a butterfly.

Wednesday, January 29, 2014

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி


நானும் என் மனைவியும் சில சமயங்களில்  TV யில் பழைய பாடல்களை போட்டு விட்டு பேசி கொண்டிருப்போம்.  நாங்கள் பேசுவதை கேட்காமல்  TV யில் நாயகனும் நாயகியும் பாடிக்  கொண்டிருப்பார்கள். அவர்கள் பாடுவதை கேட்காமல் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். எங்களையும் TV யையும் கண்டுகொள்ளாமல் எங்கள் பிள்ளைகள் படித்துக் கொண்டிருப்பார்கள் (என்ற ஒரு நம்பிக்கைதான்!!).

ஒரு நாள் எங்கள் பேச்சு சுவாரசியத்தையும் மீறி ஒரு பாடல் எங்கள் காதையும் மனதையும் நிறைத்தது.  அந்தப் பாடல் பாச மலர் படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்தான்.

"மலர்ந்தும்  மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடியும் விடியாத காலைப்  பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே".

கண்ணதாசனின் கவிதை வரிகளில் தமிழ் மொழி கொஞ்சி விளையாடுகிறது.

சத்தியமாக இன்றைய "why this கொலவெறி" இளசுகள் மேலே குறிபிட்டுள்ள பாடலுக்கு சரியாக அர்த்தம் புரிந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

முடிந்தவரை நம் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு சேர்க்க நம்மால் இயன்றதைச்  செய்ய வேண்டும்  என்ற எண்ணம் தோன்றியது..