Thursday, October 18, 2018

உண்மையான வெற்றி என்பது .....


”பெருங்கடல் நீங்கள்
அலைகளாய் நாங்கள்
ஆர்ப்பரித்து தொடர்வோம்”

இந்த வரிகளை சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்.  சங்கள் IAS அகடமியின் நிறுவனர் திரு. சங்கர் அவர்களைக் குறித்த நினைவுக் குறிப்புதான் அது.

நன்றாக பறந்து கொண்டிருந்த பட்டம் திடீரென்று அறுந்து சென்றுவிட்டது.
நம்மில் பலர் தோல்விகளைக் கூட சுலபமாக தாண்டிவந்துவிடுகிறார்கள்.  ஆனால் வெற்றியைத்தான் கையாளத் தெரிவதில்லை.  ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அவரால் தனக்கான நம்பிக்கையை தனக்ககு கொடுக்கத் தவறவிட்டுவிட்டார். 

வெற்றிகாக நாம் எந்த விலையை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதற்காக நம்முடைய வாழ்க்கையையே அதன் விலையாகக் கொடுத்துவிடக் கூடாது.

சமீபத்தில் பாவ்லோ கோயலோ (Paulo Goelho) எழுதிய “Manuscript Found in Accra” என்ற புத்தகத்தில் உண்மையான வெற்றி என்றால் என்பதற்கு சிந்தனையைத் தூண்டும் சில கருத்தக்களை கூறியிருந்தார்.  எல்லாம் நம் முன்னோர் சிந்தனைகள்தான்.  வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு வார்த்தைகளிலும்.

புத்தகத்தின் சில பக்கங்கள் என் மொழியில்.

வெற்றி என்றால் என்ன ?

யார் தன்னுடைய வாழ்க்கையை எப்போதும் மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஓப்பிட்டுக் கொண்டிருக்காமல், தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தன்னுடைய முழுத்திறனை வெளிப்படுத்துகிறார்களோ அவர்களிடம் வெற்றி வந்து சேர்கிறது.

நீங்கள் வாழ்க்கையில் துணிந்து எடுக்கும் முடிவுகளால் தவிர்க்க முடியாத சில தோல்விகள் ஏற்படும்போது துவண்டு விடமாட்டீர்கள். சென்றதையே நினைத்து நேரத்தினை வீணாக்க மாட்டீர்கள்.

வாழ்க்கையில் ஏற்படும சில வெற்றிகளிலேயே உங்கள் பயணத்தினை நிறுத்திவிட மாட்டீர்கள்.  ஏனென்றால் உங்கள் இலட்சியத்தினை அடைவதற்காக நீங்கள் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது.

தட்டுஙகள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்.  யார் மற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மற்றவர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.  இது இயற்கை நியதி.

உங்கள் இலட்சியம் எதுவாக இருந்தாலும் அதை நோக்கிய பயணத்தில் நீ்ங்கள் கண்ணும் கருத்துமாக இருந்தாலும், இடையிடையே கொஞ்சம் ஓய்வெடுத்து உங்களை சுற்றியிருக்கும் சின்னச் சின்ன சந்தோஷ தருணங்களையும் அனுபவித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.   வாழ்வை உற்று நோக்கும்போதுதான் நாம் இதற்குமுன் கவனிக்க மறந்த பல விஷயங்கள் நம் கண்ணுக்குப் புலப்படும்.

வாழ்க்கையில் குறுக்கு வழி என்று எதுவும் இல்லை. உங்கள் ஒவ்வொரு செயலும் நீங்கள் செல்லும் பாதையை மிகவும் அழகானதாகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் ஆக்கட்டும்.

காலத்தின் எஜமானராக இருக்க முயலாதீர்கள்.  முழுமையாக பழுக்கும்வரை காத்திருக்காவிட்டால் சுவையற்ற காயைத்தான் பறிக்க முடியும்.  பழுத்த பிறகும் பறிக்காவிட்டால் யாருக்கும் பயனளிக்காமல் போய்விடும்.  அதனால் வாழ்க்கையில், விதைப்பதற்கும் அறுவடைக்குமான சரியான காலத்தினை மதித்து நடங்கள்.

என்னைவிட நிறைய பேர் மிகவும் புகழுடன் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதில் பலர் அந்த புகழுக்கு மிகவும் பொருத்தமானவர்கள்கூட.  ஆனால் பலர், தற்பெருமையாலும் வீண் ஆடம்பரத்தினாலும் தங்களை புகழுடையவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள்.  ஆனால் கால ஓட்டத்தில் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

அப்படியானால் உண்மையான வெற்றி என்றால் என்ன ?

உண்மையான வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் நம் மன அமைதியுடன் படுக்கைக்குச் சென்று உறங்குவதுதான்.

ஆங்கிலத்திலேயே படிக்க விரும்புவர்களுக்கு பாவ்லோ கோயலோவின் வரிகளிலேயே.....

What is Success ?

Success comes to those who do not waste time comparing what they are doing with what others are doing; it enters the house of a person who says, "I will do my best" every day.

You were not paralyzed by the defeats that are inevitable in the lives of those who take risks.  You did not sit agonizing over what you lost when you had an idea that didn’t work.

You didn’t stop when you experienced moments of glory, because you had not yet reached your goal.

To he who knocks, the door will open.  He who asks will receive. He who consoles knows that he will be consoled.

You must always have a goal in mind, but as you go along, it costs nothing to stop now  and then to enjoy the view around you. As you advance step by step, you can see a little further into the distance, and take the opportunity to discover things you had not even noticed before.

Do not try to make the road shorter, but travel it in such a way that every action leaves the land more fertile and the landscape more beautiful.

Do not try to be the Master of Time.  If you pick the fruit you planted too early, it will be green and give pleasure to no one.  If, out of fear or insecurity, you decide to put off the moment of making the Offering, the fruit will have rotted.

Therefore respect the time between showing and harvesting.

I am aware that there are many people more famous than me, and, often, that fame is richly deserved. In other cases, it is merely a manifestation of vanity or ambition, and will not stand the test of time.

What is success ?

It is being able to go to bed each night with your soul at peace.