Friday, January 20, 2017

வாடி வாசலில் இனி ஆடிக் கொண்டாட்டம்


At last நம் இளைஞா்கள் சாதித்து காட்டிவிட்டார்கள்.  வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டார்கள்.  இனி வெற்றிக் கோப்பையை வாங்க வேண்டிய சம்பிரதாயம் மட்டும்தான் பாக்கி. அதுவும் அநேகமாக இந்த ஞாயிற்றுக் கிழமையே கூட இருக்கலாம்.

சென்னைவாசியான என்னைப் போன்றவா்களுக்கும் இன்னும் பலருக்கும் இந்த வருடம் வரை ஜல்லிக்கட்டைப் பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கக் கூடிய அளவில் இருந்தது இல்லை. கிராமப் புறங்களில் பொங்கல் சமயத்தில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு என்ற அளவில் மட்டுமே அது இருந்தது.  ஆனால் இந்த விளையாட்டுக்கு பின்னனியில் இருக்கும் நுணுக்கமான அரசியலைப் பார்க்கும்போதுதான் இந்த இளைஞா்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் அழுத்தமான காரணம் புரிந்தது.

இப்போது கூட நிறையப் போ் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக மட்டும் இதை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அப்படி இருந்தால் ஜல்லிக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாத அல்லது அந்த விளையாட்டு குறித்த அதிக அக்கறை இல்லாத பல லட்சக்கணக்கான மக்கள் இதை தங்கள் போராட்டமாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.   இது உண்மையில், நாம் நம்பும் நம் தலைவா்கள் நம்மை வார்த்தை ஜாலம் செய்து ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை ஏமாற்றுகிறார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடுதான்.  இனி இவா்களை நம்பியது போதும்.  நாமே நமக்கானதை போராடிப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.  அதில் முதல் வெற்றியும் பெற்று விட்டார்கள். 

அரசியல், மதம், இனம் என்று பல அணிகளாக இருந்த தமிழ் மக்கள் இன்று Team தமிழ்நாடு என்ற ஒரே அணியாக மாறி சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.  இந்த விழிப்புணர்வு தொடா்ந்தால் வருங்காலத்தில் இந்தியா கண்டிப்பாக வல்லரசாகும். 

சென்னை மெரினாவில் நடக்கும் இந்தப் போராட்டத்தின் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.  அதில் தமிழனாகவும், சென்னைவாசியாகவும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியில் ஜல்லிக்கட்டு குறித்த சில Tit Bits.

நாடா ? மாடா ? என்ன தேவை உங்களுக்கு.  எங்களுக்குத் தேவை நாட்டு மாடு.

இன்று ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் நாளை ”ஜல்லிக்கட்டு இதிகாசம்” என்ற புத்தகத்தை வருங்கால வைரமுத்து எவராவது எழுத வேண்டியிருக்கும்.

மாடு முட்டி செத்த மனிதா் உண்டு, மனிதர் முட்டி செத்த மாடு உண்டா ?

இது காளைக்கான போராட்டம் மட்டுமல்ல, நமது நாளைக்கான போராட்டமும் கூட.

அரசியல்வாதிகளே நீங்கள் குனிந்து குனிந்து எங்களையும் உலக அரங்கில் குனிய வைத்தீர்கள். காளையரே, கன்னியரே  நீங்கள் நெஞ்சம் நிமிர்த்தி எங்களையும் நிமிர வைத்து விட்டீர்கள்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழித்தோன்றல்கள் நாங்கள். மிருகவதை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்காதீா்கள்.

வாடி வாசலில் இனி ஆடிக் கொண்டாட்டம்.

No comments:

Post a Comment