Wednesday, November 12, 2014

நச்சென்று நாலு வார்த்தை


சில சமயங்களில் நீண்ட வாக்கியங்களும், சொற்க்குவியல்களும் விளக்க முடியாத விசயங்களை ஒரு சில வார்த்தைகள் விளக்கி விடும்.  Zen கவிதைகளின் சிறப்பே ஒரு சில வார்த்தைகள் நம் மனதில் பல எண்ணங்களை (நல்ல எண்ணங்கள்தான்) கிளறி விடும்.

ஆனால் இவை Zen கவிதைகளும் இல்லை அல்லது என் கவிதைகளும் இல்லை.   என் மனதில் பதிந்த வரிகளில் சில.   உங்களுக்கும் இதைப் படித்தால் இது போல சில வரிகள் நினைவில் தோன்றலாம்.


இந்திரா காந்தி சுடப் பட்ட அன்று யாரோ எழுதிய கவிதை.

"இன்றுதான் இந்திரா
காந்தியானார்"

இளமைக் கால கவிஞர்  வைரமுத்து சுதந்திரம் பற்றி  எழுதிய கவிதை.

"அவன் பட்டு வேட்டி பற்றிய
கனாவில்  இருந்த போது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப் பட்டது"

கம்பனை copy அடித்து யாரோ ஒரு இளைஞனின் (ஒரு அனுமானம்தான்) நையாண்டி புதுக் கவிதை :

"அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
பின்னாலிருந்து அவள்
அண்ணனும் நோக்கினான்"

அம்மா (தமிழ் நாட்டு அம்மா) சிறையில் இருந்த போது :

"அம்மா வேணும் என்று
குழந்தைகள் அழுகிறார்கள்
சும்மாவேனும் என்று
அமைச்சர்கள் அழுகிறார்கள்"

பாரதியின் சில வரிகள் :

"அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

 "நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில்
எறிவதுண்டோ"

திருமூலரின் சில வரிகள் :

"மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்கத்
தேவை இல்லை"

(என் வரிகள் - மனமது செம்மையாக மந்திரம் செபிக்க வேண்டும்)

உங்களுக்கும் இது போன்ற நச்சென்ற நாலு வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் எனக்கு சொல்லுங்கள்.  குறித்துக் கொள்கிறேன்.



No comments:

Post a Comment