Saturday, December 5, 2015

இதுவும் கடந்து போகும்


Nightmare என்று சொல்வார்கள். அதற்கு சரியான பொருள் தமிழில் என்னவென்று இனிமேல் தேட வேண்டாம். "2015 சென்னை மழை" என்று சொன்னால் போதும்.   போன மழையோடு ஆபத்து நீங்கியது என்று நினைத்து இருந்தவர்களுக்கு மீண்டும் சென்ற செவ்வாய் கிழமையில்  (1-12-2015) இருந்து பெய்ய ஆரம்பித்த மழை சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டுவிட்டது.

ஏற்கனவே சென்ற மழையின் traffic jam -இல்  மாட்டிய அனுபவம் இருந்ததால் செவ்வாய் கிழமை பெய்ய ஆரம்பித்த மழையின் வீரியத்தைப் பார்த்து மதியமே அலுவலகத்துக்கு leave declare செய்து விட்டு எல்லோரையும் வீட்டுக்கு கிளம்ப சொல்லி விட்டோம்.

மாலை நேரம் செல்லச் செல்ல மழை வெளுத்து வாங்கியதும் அடுத்து வரும் நாட்கள் எப்போதும் போல இருக்கப் போவதில்லை என்று உள்மனது சொல்லியது.  அதற்கேற்றார்போல அடுத்த சில நிமிடங்களில் power cut ஆகிவிட்டது.   Peak hour traffic-ன் நெரிசலுக்கும் இரைச்சலுக்கும் பழகிப் போயிருந்த எங்கள் தெருவுக்கும், காதுகளுக்கும் அந்த இருட்டும் மழையின் சத்தமும் ஒரு அமானுஷ்ய சூழ்நிழையை  உருவாக்கி இருந்தது. இப்போதும் மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது.  எந்த நேரத்தில் என்னுடைய முந்தைய "மாமழை போற்றுதும்" என்ற பதிவை செய்தேனோ தெரியவில்லை, உண்மையிலேயே மாமழை கொட்டிக் கொண்டிருந்தது.

நான் என் நண்பர்களுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். அதன் சாராம்சம் இதுதான் "இந்த மழை இயற்கையின் முன்  நாம் ஒன்றுமேயில்லை என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது.  நம் பாதுகாப்பை அந்த இயற்கையின்  பேராற்றலிடமே விட்டு விட்டு நாம் அனைவரும் நமக்காக பிரார்த்தனை செய்வோம்" என்பதுதான். 

வீட்டில் invertor இருந்ததால் மின் தடை பாதிப்பு அதிகம் தெரியவில்லை.  நீண்ட நாட்களுக்குப் பிறகு டிவியில்  யாரோ பேசுவதைக் கேட்டுக் கொண்டு சாப்பிடாமல் எங்கள் பேச்சை  நாங்களே கேட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

வெளியில் எட்டிப் பாத்தால் மழை இன்னும் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.  Torch அடித்துப் பார்த்த போது தெருவில் கணுக்காலை நனைத்தபடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் எப்போதும் தண்ணீர் தேங்காது. மழை விட்ட சில நிமிடங்களில் தெரு பளிச்சென்று ஆகிவிடும். அப்படியே இன்றும் ஆகிவிடும் என்று நினைத்து கதவை மூடி அன்று  கொஞ்சம்  சீக்கிரமே படுத்துவிட்டோம்.  பொதுவாக படுத்தவுடன் தூங்கிவிடும் எனக்கு அன்று mind மிகவும்  disturb ஆகவே இருந்தது.

நள்ளிரவுக்கு மேல் வெளியில் அக்கம் பக்கத்துக்கு மனிதர்களின் பேச்சுக் குரல் கேட்டு வெளியில் எட்டிப் பார்த்தேன். தண்ணீர் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் இப்படி ஒரு காட்சியை இதுவரை கண்டதில்லை.  எங்கள் Flat -ன் 2-வது மாடியில் இருந்து கீழே வந்து பார்த்தேன். மாலையில் கணுக்காலை நனைத்த தண்ணீர்   இப்போது parking area-வில் ஏறி காரின் டயர்களை நனைக்கத் தொடங்கி இருந்தது.  எங்கள் ground floor-க்கு  இன்னும் இரண்டு  படிகள்தான் பாக்கி.  

எங்கள் பகுதி அமைந்திருக்கும் சூளைமேடு area வில் வெள்ளம் வந்தால் சென்னையின் (தென் சென்னை) பெரும்பாலான பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று அர்த்தம்.  ஏரிகளை திறந்து விட்டார்கள் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. எனக்கு உடனே Tambaram Mudichur போன்ற பகுதிகளின் நிலைமையை நினைத்துதான் கொஞ்சம் concern-ஆக இருந்தது.

மீதி இரவை படுப்பதும் எட்டிப் பார்ப்பதுமாக கழித்தேன்.  காலை மீண்டும் ஒரு சோதனை.  எங்கள் நெருங்கிய உறவினரின் மரணச் செய்தி.  வெளியே இப்போது இடுப்பளவு தண்ணீர்.  நாங்கள் செல்ல வேண்டிய இடமோ மாதவரம். காரை வெளியில் எடுக்க முடியாது .  எந்த cab க்கு phone செய்தாலும் not reachable. பிள்ளைகளை அழைத்து செல்லவும் முடியாது. தனியே  விட்டுச் செல்லவும் பயம்.  கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு நானும் என் மனைவியும் இடுப்பளவு தண்ணீரில் வெளியே வந்து மெயின் ரோட்டுக்கு வந்து எப்படியோ மாதவரம் சென்று safe ஆக திரும்பி விட்டோம்.  

நல்ல வேளை செவ்வாய் கிழமை இரவுக்குப்  பிறகு  அவ்வளவு மழை இல்லை. அந்த மழை மீண்டும் ஒரு நாள் தொடர்ந்திருந்தால் ..... சென்னை என்னவாக  ஆகி  இருக்கும்  என்பதை  உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இப்போது அரசாங்கத்தையோ அல்லது யாரையுமோ குறை சொல்லி புண்ணியம் இல்லை.   இயற்கையின் பேராற்றலுக்கு முன் நாம் ஒரு தூசுக்கு கூட சமம் இல்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது இந்த மழை.  அதே சமயம் நாம் தனி மனிதராகவோ அல்லது அரசாங்கமாகவோ செய்யும் தவறுகள்தான் இயற்கையால் ஏற்படும் ஆபத்தினை பேராபத்தாக ஆக்கி விடுகிறது.

இயற்கை இன்னமும் நம் மீது கருணையோடு இருப்பதால்தான் இந்த அளவோடு நிறுத்தி இருக்கிறது.   இயற்கையை வணங்கி இயற்கையோடு இணைந்து தன்னுடைய வாழ்வை நடத்திய  நம்முடைய முப்பாட்டனின் அறிவு, படித்த நமக்கும் வந்தால் நன்றாக இருக்கும். 

பீனிக்ஸ் பறவை நெருப்பில் இருந்து உயிர்தெழுமாம். சென்னை நகர மக்களும் அப்படிதான். 



No comments:

Post a Comment