Friday, September 9, 2016

நடந்தாய் வாழி காவேரி


மழை வந்தால் வெள்ளம் வெள்ளம் என்று கூப்பாடு போடுவதும் வெயில் அடித்தால் கர்நாடகா தண்ணீர் தர வில்லை. ஆந்திரா தண்ணீர் தரவில்லை என்று புலம்புவதும் நம் வாடிக்கையாகி விட்டது.

நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுக் குழாயில் பக்கத்துக்கு வீட்டுக்காரர் வந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்தால் "வாங்க சார் தண்ணீதானே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மனமுவந்து சொல்வோம். சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர் தருவதற்கே கடலூர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

So, மொழியால் பிரிவினை பேசி தகராறு செய்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.

மழை வரும்போது கர்நாடக மாநிலம் நினைத்தாலும் தண்ணீரை அடைத்து வைக்க முடியாது.  திறந்து விட்டுத்தான் ஆக வேண்டும்.  வரும் தண்ணீரை நாம் என்ன செய்கிறோம்.  அப்படியே கடலில் கலக்க விட்டு விடுகிறோம்.  Save it for the rainy day என்று சொல்வார்கள்.  ஆனால் தண்ணீரை பொறுத்தவரை save it for the summer day தான்.

காவிரி, தாமிரபரணி, பாலாறு என்று எத்தனை ஆறுகள் தமிழ்நாட்டில் உள்ளது. கடலில் கலக்கும் முன்  இவை கடக்கும் தூரம் எவ்வளவு ? இதில் எத்தனை இடங்களில் at  least  தடுப்பணையாவது  கட்டி இருக்கிறோம்.  கரிகாலன் கட்டிய கல்லணை என்று பழம் பெருமை பேசியே காலத்தைக் கழிக்கிறோம்.

நம்முடைய அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு அறிவை மழுங்கடித்து விடுகிறார்கள்.

சென்ற வருட சென்னை வெள்ளத்தில் நாம் என்ன பாடம் கற்றுக் கொண்டோம்?  சென்ற ஒரு வருடத்தில் எந்த ஒரு நீர் நிலையாவது தூர் வாரப் பட்டிருக்கிறதா ?  அடுத்த மழைக்கும் இதே நிலைதான் தொடரும்.  ஒரு வாரம் அல்லல் படுவோம். சில பல உயிர்களை இழப்போம்.  பிறகு அரசாங்கம் தரும் 5000 (இந்த முறை கொஞ்சம் அதிகப் படுத்தலாம்) பிச்சைக் காசைப் பெற்றுக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவோம்.

50 ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை பாட்டில் அல்லது கேனில் வைத்து குடிப்போம் என்று யாரவது சொல்லி இருந்தால் அவரைப் பார்த்து சிரித்து இருப்பார்கள்.  அதைப் போல இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் சந்ததியினர் குளிக்க மாட்டார்கள்.  துணிகளை dry cleaning செய்வது போல் தங்களையும் dry cleaning செய்து கொள்வார்கள் என்று யாராவது சொன்னால் சிரிக்க வேண்டாம்.  இது நடக்க chance மிக அதிகம்.

சரி நம்மால் என்ன செய்ய முடியும்.  நாமே அன்றாட பொருளாதார நெருக்கடியில் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து சும்மா இருந்து விடலாமா ?

முன்பெல்லாம் துவைக்கும் தண்ணீர், குளிக்கும் தண்ணீர் பாத்திரம் கழுவும் தண்ணீர் என்று எல்லா நீரும் மீண்டும் மண்ணுக்கே செல்லும்.  இப்போது ஒருமுறை bath room  சென்று flush செய்தால் சில லிட்டர் என்று எவ்வளவு நீர் நம் ஒவ்வொருவராலும் waste செய்யப் படுகிறது.  இவை மண்ணுக்கு செல்வதில்லை.  கழிவு நீராய் சென்று கடலில் கலந்து விடுகிறது.  இதை  recycle செய்தாலே எவ்வளோவோ நீரை மிச்சம் செய்ய முடியும்.  

இப்படி எத்தனையோ விஷயங்களில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பிப்பதே ஒரு நல்ல ஆரம்பம்தான்.

ஒவ்வொரு எண்ணமும் ஒரு விதைதான்.  நாம் ஒவ்வொருவரும் ஒரு நல்ல எண்ணத்தை விதைப்போம். அறுவடையை நாம் செய்தால் என்ன நம் சந்ததி செய்தால் என்ன.




No comments:

Post a Comment