Wednesday, January 29, 2014

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி


நானும் என் மனைவியும் சில சமயங்களில்  TV யில் பழைய பாடல்களை போட்டு விட்டு பேசி கொண்டிருப்போம்.  நாங்கள் பேசுவதை கேட்காமல்  TV யில் நாயகனும் நாயகியும் பாடிக்  கொண்டிருப்பார்கள். அவர்கள் பாடுவதை கேட்காமல் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். எங்களையும் TV யையும் கண்டுகொள்ளாமல் எங்கள் பிள்ளைகள் படித்துக் கொண்டிருப்பார்கள் (என்ற ஒரு நம்பிக்கைதான்!!).

ஒரு நாள் எங்கள் பேச்சு சுவாரசியத்தையும் மீறி ஒரு பாடல் எங்கள் காதையும் மனதையும் நிறைத்தது.  அந்தப் பாடல் பாச மலர் படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்தான்.

"மலர்ந்தும்  மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடியும் விடியாத காலைப்  பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே".

கண்ணதாசனின் கவிதை வரிகளில் தமிழ் மொழி கொஞ்சி விளையாடுகிறது.

சத்தியமாக இன்றைய "why this கொலவெறி" இளசுகள் மேலே குறிபிட்டுள்ள பாடலுக்கு சரியாக அர்த்தம் புரிந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

முடிந்தவரை நம் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு சேர்க்க நம்மால் இயன்றதைச்  செய்ய வேண்டும்  என்ற எண்ணம் தோன்றியது..



No comments:

Post a Comment