Saturday, April 8, 2017

மகிழ்ச்சியின் மந்திரம்


சில வாரங்களாக என்னுடைய வலைதளத்தில் எந்தப் பதிவையும் செய்ய முடியவில்லை.  கொஞ்சம் busy. நாட்கள் போல் வாரங்கள் ஓடுகின்றன. 

இன்று என்னுடைய வலைதளத்தினை திறந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, நான் பார்க்கவில்லை என்றாலும்கூட என்னுடைய வலைதளத்தினை தினமும் ஒரு பத்து பேராவது படித்துவிட்டு (அல்லது எட்டிப் பார்த்துவிட்டு) செல்கிறார்கள் என்பது.  உண்மையிலேயே மனதுக்கு கொஞ்சம் நிறைவாக இருந்தது. அதிலும் பார்வையாளா்கள் (அல்லது வாசகர்கள்) நம் ஊரில் மட்டுமோ அல்லது சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் மட்டுமோ அல்லாது  உக்ரைன், போலந்து இன்னும் பல நாடுகளில் இருந்தும் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் போது உண்மையில் நம் வலைதளத்தினை பார்க்க வந்தார்களா அல்லது தவறி நம் வலையில் விழுந்தவர்களா என்றுகூட கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு விஷயம் உறுதியாகத் தெரிந்தது.  தமிழா்கள் உலக நாடுகளில் பரவிக் கிடப்பதுபோல வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று.

என்னுடைய நண்பர்கள் சிலர் என்னுடைய பதிவுகளை பார்த்துவிட்டு பாராட்டும்போது அது அவா்களின் அன்பின் மிகுதி என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொள்வேனே தவிர என்னை நான் ஒரு படைப்பாளியாக என்னை இதுவரை நினைத்துக் கொண்டதில்லை.

ஒரு வாசகனாக நான் படித்த அறிந்த விஷயங்களை மற்றவா்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். அவ்வளவுதான்.  என்னுடைய எழுத்திற்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதால் இனி பகிர்வதை at least வாரத்திற்கு ஒருமுறை என்று முறைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய ”கண்கவர் கயிலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும்” என்ற புத்தகத்திற்கு பிறகு ஆழ்நிலைத் தியானம் குறித்து ”மகிழ்ச்சியின் மந்திரம் ஆழ்நிலை தியானம்” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளேன். 

கயிலாய மலை யாத்திரை அனுபவத்தினைப் போலவே இதுவும் தியானம் குறித்த என்னுடைய அனுபவம்தான்.  ஆழ்நிலை தியானத்தினை உலகுக்கு வழங்கிய மகரிஷி மகேஷ் யோகியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஜனவரி மாதம் 12-ம் நாள் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. 

(என்னுடைய இந்தப் புத்தகத்திற்கும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழக முன்னாள் முதல்வா் திரு. பன்னீர்செல்வம் அவா்கள் பெரினாவில் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் ????).


மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment